Nigazhvu News
20 May 2025 9:13 AM IST

நவதிருப்பதி தலங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் கருட சேவை நடந்தது.

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 9 நவதிருப்பதி தலங்களில் ஒன்பதாவது ஸ்தலமாக விளங்குகிறது ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பவித்ரோத்ஸவம் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில்  பவித்ரோத்ஸவ நிகழ்ச்சியை முன்னிட்டு மாலை 5 மணிக்கு சாயரட்சை நடந்தது. அதைத் தொடர்ந்து 5.30மணிக்கு ஹோமம் நடந்தது. 6.30 மணிக்கு வாகன குறட்டற்கு சுவாமிகள் பொலிந்து நின்ற பிரான் மற்றும் நம்மாழ்வார் எழுந்தருளினர்.




7.30 மணிக்கு பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் ஹம்ச வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். அதைத் தொடர்ந்து மாட வீதி புறப்பாடு நடந்தது. இதில் முக்கிய வீதிகள் வழியாக கருட வாகனமும் ஹம்ஸ வாகனமும் வீதி உலா வந்தது.

இந்நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர், திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.







உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

2025 சனிப்பெயர்ச்சி பலன்கள் பற்றிய ஒரு விரிவான பார்வை!..

விளாத்திகுளம் அருகே வைப்பார் தர்ஹாவில் வெகுவிமர்சையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா

Copied!
இராதேயன்

ஓட்டப்பிடாரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்

இராதேயன்

கோவில்பட்டி பூமிதேவி-நீலாதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

இராதேயன்

சிதம்பராபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடைவிழாவை முன்னிட்டு 208 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

விஜயநேத்ரன்

மார்கழி திருவாதிரையில் ஆடல்வல்லானின் அற்புதம் : பாவங்களைப் போக்கி புண்ணியம் தரும் ஆருத்ரா தரிசனம்

விஜயநேத்ரன்

மங்கலம் தரும் மார்கழி | மார்கழியின் சிறப்பும் வழிபாடும்