Nigazhvu News
15 Apr 2025 5:56 PM IST

Breaking News

சிதம்பராபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடைவிழாவை முன்னிட்டு 208 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Copied!
Nigazhvu News

சாத்தான்குளம் அருகே உள்ள சிதம்பராபுரம்  அருள்மிகு  ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடை விழா  திங்கள்கிழமை  தொடங்கியது.

முதல் நாள் வருஷாபிஷேகம், அபிஷேகம், அலங்கார  தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.  இரவு கோயில் நிர்வாகம் சார்பில் 208  திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையை சாத்தான்குளம் ஒன்றிய  இந்து முன்னணி தலைவர் பால்பாண்டி தொடங்கி வைத்தார். இதில் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி , அம்பாளை வழிப்பட்டனர். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பால்பாண்டி பட்டு புடவை பரிசாக வழங்கினார். தொடர்ந்து கோயிலில் அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 2ம்நாள்  கோயிலில் காலை பூஜை, அலங்கார தீபாராதனை, முளைப்பாரி எடுத்து வருதல், சுவாமி வீதி உலா வருதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. 

விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கோவில்பட்டி பூமிதேவி-நீலாதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

மார்கழி திருவாதிரையில் ஆடல்வல்லானின் அற்புதம் : பாவங்களைப் போக்கி புண்ணியம் தரும் ஆருத்ரா தரிசனம்

Copied!
இராதேயன்

சூரங்குடி அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்ற சப்பரத் தேர் பவனி!

இராதேயன்

ஓட்டப்பிடாரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்

இராதேயன்

கோவில்பட்டி பூமிதேவி-நீலாதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

விஜயநேத்ரன்

மார்கழி திருவாதிரையில் ஆடல்வல்லானின் அற்புதம் : பாவங்களைப் போக்கி புண்ணியம் தரும் ஆருத்ரா தரிசனம்

விஜயநேத்ரன்

மங்கலம் தரும் மார்கழி | மார்கழியின் சிறப்பும் வழிபாடும்