Nigazhvu News
28 Sep 2024 11:46 PM IST

Breaking News

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள தெப்பக்குளத்தில் கோவில்பட்டி தீயணைப்பு துறை சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கையாக பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த செயல்முறை பயிற்சியை எட்டையபுரம் தாசில்தார் சங்கர நாராயணன் தொடங்கி வைத்தார்.


கோவில்பட்டி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் மனோஜ் தலைமையில் ‌ தீயணைப்புத் துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.




மழைக்காலத்தின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது? ஏரி உடைப்பு ஏற்பட்டு மீட்ட குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தால் அங்குள்ள மக்களை எப்படி பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது? ஏரி, குளம், குட்டை, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் மூழ்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கும் முறைகள்கள்  குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். 


இந்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  பேரூராட்சி, வருவாய் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!

இராதேயன்

விளாத்திகுளம் அருகே செங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 31 மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.