Nigazhvu News
17 Mar 2026 3:22 AM IST

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 6பேர் அடையாளம் கண்டறியப்பட்டு, உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு - மற்றவர்களை அடையாளம் காணும் பணி தீவிரம்

Copied!
Nigazhvu News

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஆறு பேர் அடையாளம் கண்டறியப்பட்டு, உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு 

புதன் கிழமை மதியம்  ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தனர்

குன்னூரில் விபத்துக்குள்ளான எம்.ஐ17வி5  ஹெலிகாப்டரில் பயணம் செய்த லான்ஸ் நாயக் பி சாய் தேஜா மற்றும் லான்ஸ் நாயக் விவேக் குமார் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, காலையில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு ஒப்படைக்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கூடுதலாக, ஹெலிகாப்டரில் இருந்த நான்கு IAF பணியாளர்களின் சடலங்களையும்  அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, டெல்லி கான்ட் அடிப்படை மருத்துவமனையில் மலர்வளையம் வைக்கப்பட்டு, IAF போக்குவரத்து விமானத்தில் அஸ்தி அந்தந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டது.

இறுதி சடங்குகள் தகுந்த இராணுவ மரியாதையுடன் அவர்களின் இடங்களிலேயே செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்றவர்களின் உடல்களை அடையாளம் காணும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அங்குள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர். மீதமுள்ள மரண எச்சங்களை சாதகமாக அடையாளம் காணும் முயற்சிகள் தொடர்கின்றன.

புதன் கிழமை மதியம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இருந்து தப்பிய ஒரே நபரான ஜிபி கேப்டன் வருண் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது, ஆனால் பெங்களூரு கமாண்ட் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அனைத்து சடலங்களும் வியாழன் மாலை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன, ஆனால் அன்றைய தினம் ஜெனரல் பிபின் ராவத், மதுலிகா ராவத் மற்றும் பிரிக் எல்எஸ் லிடர்  ஆகிய மூலரை மட்டுமே அடையாளம் காண முடிந்தது . அவர்களின் உடல்கள்  வெள்ளிக்கிழமை பிரார் சதுக்கத்தில் உள்ள மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இறந்த அனைத்து பணியாளர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் டெல்லிக்கு வந்துள்ளனர், மேலும் அடையாளம் காணும் பணியில் அவர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

உ.பி.யின் பல்ராம்பூரில் சரயு கால்வாய் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மத்திய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடிவு - குருநானக் ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

கிருஷ்ணரை வரைவதில் பெயர்பெற்ற ஜஸ்னா சலீம் வரைந்த கிருஷ்ணர் புகைப்படம் கோயில் கருவறையில் சமர்ப்பணம்

மித்ரன்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவி பெற புதிய இணையதளம் அறிமுகம்

விஜயநேத்ரன்

கார்கில் வெற்றி தினம் - 22 வது விஜய் திவாஸ் கொண்டாட்டம்

மித்ரன்

ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக களமிறங்கிய அவரது தங்கை ஷர்மிளா : புதிய கட்சித் தொடக்கம்

இராதேயன்

புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு - மத்திய அமைச்சராகிறார் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன்