தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஓசநூத்து கிராமத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள பெரிய பாலம் அருகில் சுமார் 85 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் இறந்த நிலையில் கிடப்பதாக ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை அடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த நிலையில் இருந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் மேலும் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முதியவர் ஊதா கலர் கட்டம் போட்ட சாரமும் கருப்பு வெள்ளை கட்டம் போட்ட சட்டையும் அணிந்துள்ளார் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் போலீசார் முதியவர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
உங்கள் கருத்தை பதிவிடுக