தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே காளவாசல் டூ செவல்குளம் கிராம வரை செல்லும் சாலையானது ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை அடுத்து முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 51 லட்சத்து 7000 மதிப்பீட்டில் 2.61 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய தார் சாலை போடும் பணி தொடக்க விழா இன்று காளவாசல் பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு கொடியசைத்து தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி வசந்தா ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி பஞ்சாயத்து தலைவர் வேலாயுதசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக