தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே முப்பிலிவெட்டி கிராமத்தில் உள்ள ராசாங்குளத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக குளத்தின் கரை உடைந்து தண்ணீர் முழுமையாக வெளியேறி மிகுந்த பாதிப்பை உண்டாக்கியது.
இந்நிலையில் கண்மாய் கரையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் இதை அடுத்து இன்று ரூபாய் 4.81 லட்சம் மதிப்பீட்டில் ராசாங்குளத்தின் கரையை சீரமைத்து கரையை பலப்படுத்தும் பணிகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டாட்சியர் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி, வசந்தா, உதவி செயற்பொறியாளர் ஜெயபால், வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் ,ஒன்றிய கவுன்சிலர் சித்ராதேவி, சண்முகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக