அரசு மருத்துவமனைக்கு கிரைண்டர், சுடு தண்ணீராக்கும் இயந்திரத்தை தலைமை மருத்துவர் பி. ஆத்திக்குமாரிடம் வழங்குகிறார் ஐஎன்டியுசி காங்கிரஸ் மாநில செயலர் ஏ.லூர்துமணி..
சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு ஐஎன்டியுசி காங்கிரஸ் சார்பில் நோயாளிகளுக்கு தேவையான கிரைண்டர், சுடு தண்ணீராக்கும் இயந்திரம் மற்றும் தேவையான பொருள்களை ஐஎன்டியுசி காங்கிரஸ் மாநில செயலர் லூர்துமணி சனிக்கிழமை வழங்கினார்.
சாத்தான்குளம் அரசு மருத்துவமனை வட்ட தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு நோயாளி வசதிக்காக தேவைபட்ட நிலையில் அரசு மருத்துவமனைக்கு கிரைண்டர் மற்றும் சுடுதண்ணீராக்கும் இயந்திரம் தேவையான பொருள்கள் ஐஎன்டியுசி காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டது. இந்த பொருள்களை ஐஎன்டியுசி காங்கிரஸ் மாநிலச் செயலர் ஏ.லூர்து மணி, மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பி. ஆத்திக்குமாரிடம் சனிக்கிழமை வழங்கினார். அப்போது முதலூர் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வகுமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலர் வர்க்கீஸ், சாத்தான்குளம் ஒன்றிய கவுன்சிலர் குருசாமி, தெற்கு வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர்கள் அண்னகணேசன், செல்வஜெகன், சேவா தள சாத்தான்குளம் நகர காங்கிரஸ் தலைவர் வண்ணமுத்து, நகர துணைத் தலைவர் சுடலையாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக