சாத்தான்குளம் வட்டார அளவிலான பூப்பந்தாட்ட போட்டிகள் படுக்கப்பத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் சாத்தான்குளம், உடன்குடி ஒன்றிய அளவிலான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியை படுக்கப்பத்து ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி சரவணன், எஸ். எம். சி தலைவர் சரவணன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியை அமுதா முன்னிலை வகித்தார். போட்டியில் 17 வயது பிரிவில் மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 14 வயது பிரிவில் உடன்குடி சல்மா மெட்ரிகுலேஷன் பள்ளியும் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். போட்டியில் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் ஐயன்கண்ணு, சத்யராஜ், ரவிக்குமார், ரிமல்சிங், பொன்சிங், குருநாதன் ஆகியோர் செயல்பட்டனர்.
வெற்றி பெற்ற அணியினருக்கும், போட்டியை சிறப்பாக நடத்தி தலைமை ஆசிரியை அமுதா, உடற்கல்வி ஆசிரியர் சைமன், நடுவராக பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் எஸ்.எம்.சி தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவிடுக