ஓட்டப்பிடாரம் அருகே சங்கம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் மகன் சதீஷ்குமார் (20) என்பவரின் இரு சக்கர வாகனத்தை அதே பகுதியைச் சேர்ந்த தங்கமுத்து மகன் செல்வராஜ் (16) என்ற சிறுவன், சதீஷ்குமாரை பின்னாடி ஏற்றிக்கொண்டு செப்டம்பர் 23 அன்று இரவு குலசேகரநல்லூரை நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது முறம்பன் கல் பாலம் அருகே சென்றபோது எதிரே முறம்பன் கிராமத்தைச் சேர்ந்த செந்தூர் கனி (50) என்பவர் ஓட்டிச் சென்ற டிராக்டரும் இருசக்கர வாகனமும் எதிர்பாராத மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற செல்வராஜ், சதீஷ்குமார் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் செல்வராஜ் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து மணியாச்சி காவல் நிலைய காவல் நிலைய ஆய்வாளர் காவல் ஆய்வாளர் சுதந்திரதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
உங்கள் கருத்தை பதிவிடுக