ஓட்டப்பிடாரம் அருகே சாமிநத்தம் தெற்கு தெருவை சேர்ந்த ராமையா மகன் கல்லாண்டபெருமாள் (65) என்பவர் ஆடுகள் வளர்த்து வருகிறார்.
இன்று காலையில் மேய்ச்சலுக்காக சாமி நத்தம் விலக்கு அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கல்லாண்டபெருமாள் புதியம்புத்தூர் டூ தூத்துக்குடி சாலையில் சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று கல்லாண்ட பெருமாள் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக