தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழஈரால், மேலஈரால் உள்ளிட்ட கிராமங்களில் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பாக வேப்ப மரங்கள் நடுவதற்கு கிராம மக்களுடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் வேப்பமரம் நடப்பட்டு வேப்பமரத்தின் மூலம் விவசாயம் செய்வதற்கு ஆலோசனை வழங்கினார்.
நிகழ்வில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், கீழஈரால் ஊராட்சி மன்ற தலைவர் பச்சைப்பாண்டி, கீழஈரால் கிளைச் செயலாளர் சண்முகவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கீழஈரால், மேலஈரால் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக