மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 72 வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் தேமுதிகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு தேமுதிகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பூஜை செய்து வணங்கி வழிபாடு செய்தனர். அதேபோல் ஓட்டப்பிடாரம் அருகே வேப்பலோடையில் இன்று இரவு சுமார் நூறு பொதுமக்களுக்கு கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இரவு உணவு வழங்கப்பட்டது .இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் எல்லப்பன் ,ஒன்றிய அவைத் தலைவர் காளிங்கன், ஒன்றிய பொருளாளர் ஜெயகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சண்முகவேல் ,ஒன்றிய துணைச் செயலாளர்கள் செல்லதுரை, மகாராஜன் ,நகரச் செயலாளர் ஜெயசங்கர் ,கிளைச் செயலாளர்கள் பொன்ராஜ், செந்தில், அய்யனார் மற்றும் ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக