பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில் நூலகம் அமைக்க வேண்டாம்: பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
"தேனி மக்கள் கடவுளாகப் போற்றும் பென்னிகுவிக்கின் நினைவு மண்டபத்தில், கருணாநிதி நுாலகம் அமைக்க வேண்டாம். மக்களின் எண்ணங்களுக்கும், மன உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நுாலகத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்" என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் " ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் தென் மாவட்டங்களின் வறட்சியை நீக்கி, பசுமையை நிலைக்க செய்தார். அன்றைய ஆங்கில அரசு அணை கட்டும் முயற்சியைக் கைவிட்டபோதும், தன்னுடைய சொந்த செலவில், தமிழ்நாட்டு மக்களுக்காக அணை கட்டி கொடுத்தவர் பென்னி குவிக்.

மனித தெய்வமாக வணங்கப்படும் தன்னமலற்ற அந்த தியாக உள்ளத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், மதுரை -நத்தம் சாலையில், அன்னாரின் நினைவாக, இரண்டு ஏக்கரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது.
தற்போது புதிதாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் தி.மு.க. அரசு, பென்னி குவிக் நினைவு மண்டபத்தில், கருணாநிதியின் பெயரால் ஒரு நுலகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு, தென் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளையும், பொது மக்களையும் வெகுவாகப் பாதித்து இருக்கிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிறப்பு செய்ய நினைக்கும் தி.மு.க அரசுக்கு, அவரின் பெயரில் நுாலகம் அமைக்க, வேறு எந்த கட்டடமும் கிடைக்கவில்லையா என தென் மாவட்ட மக்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் " புத்தகங்கள் வரலாற்று பெட்டகங்கள்தான். ஆனால், அது இன்னொரு வரலாற்றுச் சின்னத்தை அழித்து உருவாக்கப்பட வேண்டுமா என்றும், மக்கள் போராடத் தயாராகி வருகின்றனர்.
கருணாநிதி பெயரால் அமையும் நுாலகத்தை, மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். இதை தான், அவரின் ஆன்மாவும் விரும்பும். மக்களின் எண்ணங்களுக்கும், மன உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, கருணாநிதி பெயரால் அமையும் நுாலகத்தை, மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்
உங்கள் கருத்தை பதிவிடுக