’வலிமை’ அப்டேட் கொடுத்த தமிழக அரசு : நாளை "ரிலீஸ்" செய்கிறார் முதல்வர் மு.கஸ்டாலின் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடட் சார்பில் தயாரிக்கும் “வலிமை" சிமெண்ட்டை தமிழக முதலமைச்சர் மக்களுக்கு நாளை அறிமுகம் செய்து வைக்கிறார்.
சிமெண்ட் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு வலிமை என்ற பெயரில் சிமெண்ட் தயாரிக்கும் திட்டத்தை அறிவித்து இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்திருந்த நிலையில், திட்டம் எப்போது தொடங்கும் என கட்டுமான வல்லுநர்களும், பொதுமக்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.
சற்று முன்னர் தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில் நாளை வலிமை சிமெண்ட்டை மக்களுக்கு முதலமைச்சர் அறிமுகப்படுத்துவார் என்று அப்டேட் கொடுத்துள்ளது.
அந்த அறிக்கையில் "தமிழக அரசின் தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடட் நிறுவனமான டான்செம் சார்பில் தயாரிக்கப்படும் அரசு சிமெண்ட்டை வெளிச்சந்தைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிமுகப்படுத்தப்படும் "வலியதோர் உலகம் செய்வோம்" எனும் கருத்தை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிமெண்ட், குறைந்த விலையிலும், நிறைந்த தரத்திலும் உருவாகி உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக