
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அவருடைய இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனா நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதன்போது அவருடன் திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக முதல்வரை எல்.கே. சுதீஷ் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்பு முதல்வருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய விஜயகாந்த், கொரோனா நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரிடம் வழங்கினார். பின்னர் 15 நிமிடங்கள் தொடர்ந்த இந்த சந்திப்பில், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்
உங்கள் கருத்தை பதிவிடுக