இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக முதல் முழக்கமிட்ட பாஞ்சாலங்குறிச்சி மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மு வின் 265 வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வீரபாண்டிய கட்டபொம்முவின் நேரடி வாரிசுதாரர்கள் (Senior Line) பாஞ்சாலங்குறிச்சி ஜெகவீர பாண்டியதுரை, ராஜேஷ்குமார், ஹரிஹரன், விக்னேஷ்குமார், வேடபட்டி பால்ராஜ், ஆதனூர் துரைகள் சூடாமணி, ஸ்ரீராம கட்டபொம்முதுரை, ஆகியோர்கள் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள கட்டபொம்மன் நினைவு கோட்டையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
கோட்டையில் உள்ள வீர சக்க தேவி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவில் கமிட்டியினர், வருவாய்த்துறை மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக