Nigazhvu News
30 May 2025 11:29 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டார்

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டத்தில் 14.48 லட்சம் வாக்காளர்கள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (22.01.2024), மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

அதில், 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெற்றது. இதில், பெயர் சேர்த்தல், தொகுதி மாற்றம், நீக்கம் மற்றும் திருத்தம் அல்லது நகல் முறை திருத்தம் ஆகியவற்றுக்கு மொத்தம் 71,792 மனுக்கள் பெறப்பட்டன (27.10.2023 முதல் 09.12.2023 வரை).

அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு, 69,885 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 7,08,244 ஆண் வாக்காளர்களும், 7,39,720 பெண் வாக்காளர்களும், 215 மூன்றாம் பாலினத்தோர்களும் என மொத்தம் 14,48,179 வாக்காளர்கள் உள்ளனர்.

முக்கிய புள்ளிவிவரங்கள்:

  • தகுதி நாள்: 2024-ம் ஆண்டு ஜனவரி 1
  • மொத்த வாக்காளர்கள்: 14,48,179
  • ஆண் வாக்காளர்கள்: 7,08,244
  • பெண் வாக்காளர்கள்: 7,39,720
  • மூன்றாம் பாலினத்தோர்: 215

விளாத்திகுளம் தொகுதி:

  • ஆண்கள்: 1,02,845
  • பெண்கள்: 1,06,607
  • மூன்றாம் பாலினம்: 20
  • மொத்தம்: 2,09,472
  • 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள்: 2,048

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி:

  • ஆண்கள்: 1,36,716
  • பெண்கள்: 1,43,338
  • மூன்றாம் பாலினம்: 71
  • மொத்தம்: 2,80,125
  • 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள்: 1,881

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி:

  • ஆண்கள்: 1,16,665
  • பெண்கள்: 1,23,189
  • மூன்றாம் பாலினம்: 30
  • மொத்தம்: 2,39,884
  • 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள்: 2,222

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி:

  • ஆண்கள்: 1,09,476
  • பெண்கள்: 1,12,914
  • மூன்றாம் பாலினம்: 3
  • மொத்தம்: 2,22,393
  • 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள்: 1,790

ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதி:

  • ஆண்கள்: 1,19,032
  • பெண்கள்: 1,24,078
  • மூன்றாம் பாலினம்: 58
  • மொத்தம்: 2,43,168
  • 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள்: 2,384

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி:

  • ஆண்கள்: 1,23,510
  • பெண்கள்: 1,29,594
  • மூன்றாம் பாலினம்: 33
  • மொத்தம்: 2,53,137
  • 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள்: 1,658

18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள்:

  • மொத்தம்: 11,983

வண்ண வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தேசிய வாக்காளர் தினமான 25.01.2024 அன்று முதல் பதிவஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

வாக்காளர் பட்டியல் திருத்தம்:

வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தம் நடைபெறுவதால், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தியான அனைத்து நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அனைத்து வேலை நாட்களிலும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் தேர்தல் அலுவலரிடமிருந்து படிவங்களை பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 01.08.2022 முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் நமது மாவட்டத்தில் 72 சதவிகிதம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர்.

மேலும் நகரப்பகுதிகளில் இப்பணி மிக குறைவாக உள்ளதால், அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்களது ஆதார் எண்ணை தங்களது பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளித்து வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது, முகவரி மாற்றுவது மற்றும் ஆதார் எண்ணை இணைப்பது ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க www.voters.eci.gov.in என்ற இணையதள முகவரியில் அல்லது Voter Helpline APP (VHA) என்ற செயலி மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான தகவல்களை பெறவும், இடர்பாடுகள் இருப்பின் தெரிவிக்கவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய இலவச தொலைபேசி எண் 0461-1950ல் தொடர்பு கொள்ளலாம். மேலும், தங்கள் பகுதி வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியர் அலுவலகங்களையும் தொடர்பு கொள்ளலாம்.

என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) செந்தில்வேல்முருகன் உட்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்முவின் நேரடி வாரிசுதாரர்களை அரசு கௌரவித்தது

திருச்செந்தூர் தைப்பூசத் திருவிழா பாதயாத்திரை பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்