
75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய சுதந்திரத்திற்காக முதல் முழக்கமிட்ட பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்முவின் நேரடி (Senior Line) வாரிசுதாரர்களை அரசு சார்பில் நேரில் சந்தித்து கௌரவித்தனர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில், வீரபாண்டிய கட்டபொம்முவின் நேரடி வாரிசுதாரர்களாகிய பாஞ்சாலங்குறிச்சி ஜெகவீர பாண்டியதுரை, வேடபட்டி பால்ராஜ், ஆதனூர் சுப்பிரமணிய கட்டபொம்முதுரை, துரைகள் சூடாமணி, பாலசுப்பிரமணிய கட்டபொம்மு ஆகியோர்களுக்கு வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் பொன்னாடை, மாலை அணிவித்து கௌரவப்படுத்தினர்.
இந்த நிகழ்வு வீரபாண்டிய கட்டபொம்முவின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில் அமைந்தன.
உங்கள் கருத்தை பதிவிடுக