Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

விளாத்திகுளம் அருகே தாய் கண் முன்னே மின்னல் தாக்கி மகன் பலி.

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சோலைராஜ்(31), இவர் தந்தை முருகன் மற்றும் தாய் அனந்தம்மாள் ஆகியோருடன் குடும்பத்துடன் சேர்ந்து இப்பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி விறகு கரிமூட்டம்  போடும் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று ஒரு மணி நேரம்  கனமழை பெய்த கொண்டிருந்தபோது, மூட்டத்தில் இருந்த விரகுகள் தண்ணீரில் அடித்து செல்லக்கூடாது என்பதற்காக, வீட்டில் இருந்த சோலைராஜ் கரி மூட்டத்தில்  மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு பாத்தியமைக்க மழையில் நனைந்தபடியே சோலை ராஜ் மற்றும் தாய் அனந்தம்மாள் கரிமூட்டத்திற்கு வந்த போது, எதிர்பாராத விதமாக சோலைராஜ் மீது இடி, மின்னல் தாக்கியதில் சோலைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இதனை அடுத்து தகவல் அறிந்த  விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சோலைராஜ் உடலை மீட்டு  பிரேத ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னே நடந்து சென்ற சோலைராஜ் மீது தாய் அனந்தம்மாள்  கண்முன்னே இடி, மின்னல் தாக்கி  மகன் உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முறையான அனுமதியின்றி குளத்து மண் அள்ளியதாக ஒரே நாளில் 27 டிராக்டர்கள் பறிமுதல். புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை.

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்முவின் நேரடி வாரிசுதாரர்களை அரசு கௌரவித்தது

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்