தூத்துக்குடி மாவட்டத்தில் மண்பாண்ட தொழில் செய்வதற்கும், விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்கும் குளத்தில் வண்டல் மண் அள்ளிக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பல்வேறு வழிமுறைகளையும் வகுத்துள்ளது.
ஆனால் விவசாய நிலங்களுக்கும், மண்பாண்ட தொழிலுக்கும் பயன்படுத்தாமல் செங்கல்சூளைகளுக்கு மண் அள்ளுவதாக புகார் எழுந்து வந்தது.
இந்த நிலையில் செங்கல்சூளைகளுக்கு முறையான அனுமதி சீட்டு இன்றி வண்டல் மண் அள்ளி 10 டிராக்டர்களை ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக டிஎஸ்பியாக பொறுப்பேற்ற ராமகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் பிடித்து ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதே போல் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அனுமதிசீட்டு இன்றி வண்டல் மண் அள்ளி வந்த 17 டிராக்டர்களை டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனால் ஒரே நாளில் முறையான அனுமதி சீட்டு இல்லாமல் குளத்தில் வண்டல் மண் அள்ளிய 27 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக