Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

தென்திருப்பேரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை. மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு.

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் மாலை 3 மணி அவரை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதற்கிடையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தது.

அதைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை, குருகாட்டூர், கோட்டூர், குரங்கணி, கடையனோடை, சாத்தான்குளம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.




இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேய்ச்சலுக்கு சென்ற ஆடு மாடுகள் ஆங்காங்கே ஒதுங்கி நின்றது.

மழையால் நாசரேத் சாத்தான்குளம் சாலையின் ஓரம் இருந்த மரம் ஒன்று காற்றில் சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் அந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மதியத்திற்கு மேல் அவ்வப்போது மழை பெய்து வருவது சற்று குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் நிரந்தர மகப்பேறு மருத்துவர் நியமிக்க அதிமுக வலியுறுத்தல்

சாத்தான்குளம் அருகே இடைச்சிவிளையில் நாகர்கோவில் கால்வின் மருத்துவமனை சார்பில் குமரன் விளை சமுக ஆர்வலர் பாலகிருஷ்ணன் ஏற்பாட்டில் இலவச இருதயம், பொதுமருத்துவம் மற்றும் கண் மருத்துவமுகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்