Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே சந்திரகிரி விளக்கு பகுதியில் மாடு மீது இருசக்கர வாகன மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பலி - ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம் அருகே கச்சேரி தளவாய்புரம் மேல தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி மனைவி விஜயலட்சுமி (54)என்பவர் தனது மகன் செந்தில்குமார் (32) என்பவருடன் நேற்று மாலையில் உறவினர் வீட்டு நிச்சியவிழாவில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சந்திரகிரி விலக்கு பகுதி அருகே சென்றபோது அந்த வழியாக மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மாடு மீது மோதி விபத்துக்குள்ளானதில் விஜயலட்சுமிக்கு மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது இதை அடுத்து அருகில் இருந்தவர்கள் விஜயலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு விஜயலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விஜயலட்சுமி மகள் கார்த்திகா ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் இன்று அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவம்குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே தருவைகுளத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் எம்எல்ஏ சண்முகையா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆடு வயலில் மேய்ந்த தகராறில் வாலிபரை வெட்டிக் கொன்ற அண்ணன், தம்பி உட்பட 4பேரை போலீசார் கைது செய்தனர்.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்