ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி என்பது ஸ்ரீவைகுண்டம், ஏரல், சாத்தான்குளம் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கியதாகும். இம்மூன்று தாலுகாக்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள புதிய வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான பணிகள் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை மேற்கொள்ளும் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு வாக்காளர் விபரம் கணக்கெடுப்பு குறித்து பயிற்சி வகுப்பு ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார் தலைமை தாங்கி பேசுகையில்,
ஒவ்வொரு தேர்தலிலும் நூறு சதவீத வாக்குப்பதிவு என்ற லட்சியத்தை அடைய வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்கள் நூறு சதவீதம் சரியாக இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதால் அப்ப பணிகளை மேற்கொள்ளும் வாக்காளர் நிலை அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கான பணிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அப்பணிகளை முழு அர்ப்பணிப்போடு செய்து முடிக்க வேண்டும் என்றார் அவர்.

தேர்தல் துணை தாசில்தார் சுல்தான் சலாவுதீன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கான பணிகள் குறித்த விபரங்கள் என்ன என்பது குறித்தும் வீடு தேடி சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்த்து புதிய வாக்காளர்களை சேர்ப்பது இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வது எவ்வாறு என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இக் கூட்டத்தில், தேர்தல் பிரிவு அலுவலர் பிரின்ஸ் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக