இடைச்சிவிளை பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு திசையன்விளை ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு 51 மாணவ, மாணவிகளுக்கு இலவச சிருடைகளை வழங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் மேனகா வரவேற்றார். இதில் ஊர் பிரமுகர்கள் செந்தில்குமார், ராம்ச்சந்திரன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக