Nigazhvu News
17 Mar 2026 3:14 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே S.கைலாசபுரத்தில் கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி சிதைந்த சாலை - நடவடிக்கை எடுக்காத குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்; மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம் அருகே S.கைலாசபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தார் சாலையின் அடிப்பகுதி வழியாக வல்லநாட்டிலிருந்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, காரியாபட்டி உள்ளிட்ட நகரங்களுக்கு கூட்டு குடிநீர் திட்ட மூலம் தண்ணீர் செல்லும் பைப் லைன்  செல்கிறது.




இந்த  மெயின் பைப் லைனில் மூன்று இடங்களில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக உடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. மேலும் இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் புதிதாக போடப்பட்ட தார் சாலை ஆனது சிதைந்து ககாணப்படுகிறது.



மேலும் சாலையின் அருகில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் அருகிலும் நீர் கசிந்து பசலி அடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து S.கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருவடி என்பவர் எங்களது  கிராமம் வழியாக செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உடனடியாக உடைப்பு  ஏற்பட்ட பைப் லைனை  சரி செய்து சிதைந்த தார்சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி தொடங்கிய நிலையில் அருகில் உள்ள ஆர்சி வடக்கு தெரு மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அடைத்ததாக கூறி அப்பகுதி மக்கள் திடீரென திரண்டதால் பரபரப்பு...

கோவில்பட்டி ஆய்வு பணி செய்ய வந்த நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் சிறப்பான வரவேற்பு அளித்த மாவட்ட துணை கண்காணிப்பாளர்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்