தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கே டி கோசல்ராம் பேருந்து நிலையம் பழுதடைந்த காரணத்தினால் அது முழுவதுமாக இடிக்கப்பட்டு தற்போது சுமார் ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அருகில் உள்ள ஆர்சி வடக்கு தெரு பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு செல்வதற்கான பாதையை அடைத்ததாக கூறி அப்பகுதியில் திரண்டு அதிகாரிகளிடம் கட்டுமான பணியை நிறுத்துமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பேருந்து நிலையம் கட்டுவதற்கான வரைபடம் எங்கே இருக்கிறது? அதில் எங்கள் பகுதிக்கு செல்வதற்கான பாதை இருக்கிறதா இல்லையா என்று பொறியாளரிடம் கேள்வி எழுப்பினர்.
முறையான வரைபடத்தை காண்பித்து பாதை உள்ளது என்று தெரிந்த பின்னர் கட்டுமான வேலையை செய்யுங்கள். அதுவரை வேலை செய்ய விட மாட்டோம் என்று சுமார் 50க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டனர்.
அதன் பின்னர் அதிகாரிகள் தரப்பில் நாளை இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பின்பு முடிவு செய்யலாம் என்று கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...
உங்கள் கருத்தை பதிவிடுக