Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

சேதமடைந்த சுப்பராயபுரம் தரைமட்ட பாலம் படம் 2., சடையனேரி கால்வாயில் பழுதடைந்துள்ள உபரி நீர் ஷட்டர்

Copied!
Nigazhvu News

சாத்தான்குளம்

கடந்த மழை வெள்ளத்தில் சேதமான சுப்பராயபுரம் தாம்போதி பாலத்தை பருவ மழை தொடங்கும் முன்பு சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரத்திலிருந்து பன்னம்பாறை செல்லும் ரோட்டில் கருமேனியாறு செல்லும் தரைமட்ட பாலம் உள்ளது .இந்த பாலம் கடந்த ஆண்டு பெய்த அதி கன மழையில் சேதம் அடைந்தது. மேலும் இந்த வழியாகத்தான் சடையனேரி கால்வாய் தண்ணீர்  புத்தன்தருவைக்கு செல்கிறது .இந்த ரோட்டில் முதலூர் , பொத்தக்காலன்விளை,போலையர்புரம் பகுதியில் உள்ளவர்கள் பன்னம்பாறை ,மெஞ்ஞானபுரம் செல்வதற்கு நேர்வழிப் பாதையாக உள்ளது. தரைமட்ட பாலம் சேதமடைந்ததால் மழைக்காலத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பருவ மழை தொடங்கும் முன்பு சுப்பராயபுரம் தரைமட்ட பாலத்தை சீர் செய்ய வேண்டும் என முதலூர் சமூக ஆர்வலர்கள் விவசாயி அல்பர்ட், ஆசிரியர் ராஜசிங் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும் அதே பகுதியில் உள்ள சடையனேரி கால்வாய் உபரி நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட ஷட்டர் பழுதடைந்துள் TVளது.இதனால் சடையனேரி கால்வாயில் சிறிதளவே தண்ணீர் வந்தால் கருமேனி ஆற்றில் கலந்து விடும்.இதனால் முதலூர் ஊரணி, வைரவம் தருவை,புத்தன்தருவை குளங்களுக்கு தண்ணீர் செல்லாது.எனவே பொதுப்பணித்துறையினர் மழைக்காலம் தொடங்கும் முன்பு அந்த ஷட்டரையும் சீர்செய்ய வேண்டும் என கூறினர்.





உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கோவில்பட்டி பள்ளியில் தேசிய விண்வெளி தின விழா

சாத்தான்குளம் ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி 26 பேர்கள் ஸ்டிரைக்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்