தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டியில் உள்ள கிணற்றில் பள்ளி விடுமுறை என்பதால் சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த தாமஸ் நகரை சேர்ந்த ஆகாஷ்(14), பூசாரி பட்டியை சேர்ந்த ஜான் (14). சிறுவர்கள் இருவரும் கிணற்றின் மேல் பகுதியில் இருந்து குதிக்கும் போது ஒருவர் மீது ஒருவர் மோதியதில் நிலைகுலைந்து போய் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.இது குறித்து தகவல் கிடைத்ததும் முன்னாள் அமைச்சரும்,கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ நேரில் சிறுவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு சிறுவர்கள் நேரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



உங்கள் கருத்தை பதிவிடுக