வீட்டு மனைப் பட்டா, நிலப் பட்டா, முதியோர் ஓய்வூதியம், விதவைகள் ஓய்வூதியம், மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழ் நாடு அரசைக் கேட்டு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க வட்டக் கிளை சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க சாத்தான்குளம் வட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார் .வட்ட துணைத்தலைவர் ஜெயபால் முன்னிலை வகித்தார்.. கோரிக்கைகளை விளக்கி வட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ,மாவட்ட துணைத்தலைவர் கந்தசாமி, தமிழ்நாடு விவசாய சங்க வட்டத் தலைவர் கிருஷ்ணன், வட்டச் செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சேசுமணி ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காந்திபுரி கிளைச் செயலாளர் கௌரி உட்பட பலர் கலந்து கொண்டனர் .அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க சாத்தான்குளம் வட்ட துணைச் செயலாளர் டேவிட் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்ட முடிவில் சாத்தான்குளம் தாசில்தாரிடம் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக