Nigazhvu News
17 Mar 2026 3:22 AM IST

விளாத்திகுளம் அருகே நெஞ்சு வலியால் துடித்த பஞ். தலைவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மரணம்!

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்தையாபுரம் கிராமம் கிழக்குத்தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் உமையணன்(72). இவர் கடந்த 6 ஆண்டுகளாக 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் திறந்துவிடும் பணியைச் செய்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, முத்தையாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பதவி வகித்து வந்த  உமையணன் இரண்டு ஆண்டுகளாகவே நெஞ்சுவலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.


மேலும் நேற்று இரவு தனது நெஞ்சுவலி இருப்பதாக தனது குடும்பத்தினரிடம் உமையணன் கூறியுள்ளார். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை 5 மணியளவில் அரியநாயகிபுரம் கிராமத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக வந்திருந்த உமயணனுக்கு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக உமையணன் தனது பேரனுக்கு செல்போன் மூலம் அழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு வந்த உமையணனின் பேரன் அவரது இருசக்கர வாகனத்தில் கடும் நெஞ்சு வலியால் துடித்த உமையணனை அழைத்துக்கொண்டு விளாத்திகுளம் நோக்கி மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது வழியிலேயே உமையணன் கடும் நெஞ்சுவலி தாங்காமல் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்ற விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து உயிரிழந்த முதியவர் உமையணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

சாலையை ஆக்கிரமித்து செடி வளர்க்கும் கவுன்சிலர் ; பேரூராட்சி அலுவலகம் முன்பே அரங்கேறும் அட்டூழியம்!

ஓட்டப்பிடாரம் அருகே மணிகட்டி நகரில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் - எம்எல்ஏ சண்முகையா உறுதி

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்