Nigazhvu News
17 Mar 2026 3:21 AM IST

சாலையை ஆக்கிரமித்து செடி வளர்க்கும் கவுன்சிலர் ; பேரூராட்சி அலுவலகம் முன்பே அரங்கேறும் அட்டூழியம்!

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து, 2-வது வார்டான சாலையம் தெருவிற்கு செல்லும் சாலையானது ஏற்கனவே குறுகலான சாலையாக இருப்பதாலும் NO PARKING ZONE -ல் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக நிறுத்தப்பட்டு இருப்பதாலும் அந்த சாலை வழியாக பள்ளி, மருத்துவமனைகளுக்கு செல்வதற்கும், நூலகத்திற்கு செல்வதற்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு இடையில் தான் சென்று வருகின்றனர்.


ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் இச்சாலையில், விளாத்திகுளம் பேரூராட்சி நான்காவது வார்டு கவுன்சிலர் சாலையில் சிறு சிறு தொட்டிகள் மூலம் செடிகளை வளர்ப்பதாகக்கூறி சாலையை ஆக்கிரமிப்பு செய்து தன்னுடைய கடை பேனர்களை வைத்து விளம்பரம் செய்து வருகிறார். விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பே நடக்கும் இந்த அட்டூழியத்தை இவ்வழியாக செல்லும் பேரூராட்சி அலுவலகத்திற்கு நாள்தோறும் சென்று வரும் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், செயல் அலுவலர் மகேஸ்வரன், பேரூராட்சி மேற்பார்வையாளர் மீனாட்சி சுந்தரம் போன்ற ஒருவரின் கண்களிலும் படவில்லை என்பது பலரது முனுமுனுப்பாக இருந்து வருகிறது.... 


2-வது வார்டு பெண் வார்டு கவுன்சிலர் ஒருவரே இதுபோன்று பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலையை தனது சொந்த இடம் போல எண்ணி செடிகள் வளர்ப்பதும் தன்னுடைய கடை விளம்பர பேனர்களை வைப்பதுமாக அராஜகத்தில் ஈடுபட்டு வருவது விளாத்திகுளம் பகுதி மக்களிடையே பெரும் பேசும் பொருளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் உடனடியாக விளாத்திகுளம் காவல்துறை அதிகாரிகள் பொதுக்கள் செல்லும் சாலையில் இடையூறாக வைக்கப்பட்டுள்ள செடிகள் மற்றும் கடை விளம்பர பேனர்களை அகற்றி போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதும், அப்பகுதியில் "NO PARKING ZONE" -ல் இருசக்கர வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது....


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கோவில்பட்டி அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தகோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

விளாத்திகுளம் அருகே நெஞ்சு வலியால் துடித்த பஞ். தலைவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மரணம்!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்