Nigazhvu News
09 May 2025 10:00 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே தருவைகுளத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் பீடி இலை கடத்தலும் அதிகரித்து உள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் தொடர்ச்சியாக கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 


இந்தநிலையில் தருவைகுளம் உதவி ஆய்வாளர் முத்துமாரி தேவேந்திரருக்கு கிடைத்த தகவலின்படி நேற்று இரவு 10 மணி அளவில் போலீசார் சாலையில் நிறுத்தியிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் 35 கிலோ வீதம் 37 மூடைகளில் பீடி இலை பண்டல்கள் இருந்தது. இதனை இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து பீடி இலைகளை சரக்கு வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் ஊட்டச்சத்து உணவு திருவிழா

ஓட்டப்பிடாரம் அருகே புதுப்பச்சேரியில் காணாமல் போன முதியவர் இறந்த நிலையில் மீட்பு - புதியம்புத்தூர் போலீசார் விசாரணை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்