Nigazhvu News
29 Sep 2024 11:46 PM IST

Breaking News

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் உள்ள ரேஷன் கடைகளில் எம்எல்ஏ சண்முகையா திடீர் ஆய்வு

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் உள்ள நான்கு ரேஷன் கடைகளில்  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது அங்கிருந்த பொது மக்களிடம் சரியான அளவில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார் தொடர்ந்து ரேஷன் கடையில் சீனி பருப்பு எண்ணெய் அரிசி உள்ளிட்ட பொருட்களின் இருப்புகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்களிடம் மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான பொருள்கள் வருகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து  ரேஷன் கடை ஊழியர்கள் எண்ணெய் பருப்பு பச்சரிசி உள்ளிட்ட பொருட்கள் குறைவான அளவில் வருவதாகவும்  அதை நிவர்த்தி செய்து தர எம்.எல்.ஏ இடம் தெரிவித்தனர். இதை அடுத்து எம்எல்ஏ சண்முகையா வரும் மாதங்களில் ரேஷன் கடைகளுக்கு சீரான பொருள்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.






உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரத்தில் மர்ம நபர்கள் தீ வைப்பு - வாழை பயிர்கள் சேதம்; விவசாயி வேதனை

எட்டயபுரத்தில் சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!