Nigazhvu News
29 Sep 2024 10:00 AM IST

Breaking News

சாத்தான்குளம் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் போராட்டம் . அதிகாரிகள் சமரசம்.

Copied!
Nigazhvu News

சாத்தான்குளம் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் அதிகாரிகள்  பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து உடன்பாடு ஏற்ப்பட்டது. இதனால் சுமார் 6மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே நெடுங்குளத்தில் கலுங்கு விளை சாலையில்   தனியார்  கல்குவாரி   தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு வெடிவைத்து பாறைகள் உடைக்கப் படுவதால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சுவர்களில் விரிசல் ஏற்படுவதாகவும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். கல்குவாரியை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.  


இந்நிலையில் நெடுங்குளத்தில் செயல்படும் கல்குவாரியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட சுமார்   200க்கு மேற்பட்டோர்    புதன்கிழமை  காலை அங்குள்ள பால்பண்ணை முன்பு திரண்டு வந்து  திடீரென  அமர்ந்து கண்ணீல் கறுப்பு துணி கட்டி போராட் டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சாத்தான்குளம்  வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி, டிஎஸ்பி சுபகுமார்,  காவல் ஆய்வாளர்   ஏசுராஜசேகரன்,  உதவி ஆய்வாளர்  சுரேஷ்குமார்  மற்றும் போலீஸார், வருவாய்த்துறையினர் சம்பவ இடம் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.




ஆனால் கல்குவாரி அகற்றப்படும்வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்து  போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  இதனை தொடர்ந்து அதிகாரிகள், போலீஸார்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில் மாவட்ட கனிவள இயக்குநர்  வியாழக்கிழமை  நெடுங்குளம்  கிராமத்திற்கு வந்து புகார் கூறப்பட்ட கல்குமாரியை ஆய்வு நடத்தி அதனை மூடுவதற்கான உத்தரவாதம் அளிப்பார் என உறுதி அளிக்கப்பட்டதும் அதன்பேரில் கிராம மக்கள் போராட்டத்தை  தற்காலிகமாக  கைவிடுவதாக அறிவித்தனர்.  அவ்வாறு கல்குவாரி மூடப்படாத பட்சத்தில் வெள்ளிக்கிழமை  கிராம மக்கள் ரேசன், ஆதார் கார்டுகளை கிராம  நிர்வாக அலுவலகத்தில் ஓப்படைத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

பேய்குளம் அருகே 20 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் பணம் கொள்ளை

மக்காச்சோளத்திற்கான பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தியும், சமாதான கூட்டம் என்ற பெயரில் விவசாயிகளை அதிகாரிகள் அவமதித்துவிட்டதாக கூறி எட்டையபுரம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!