Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3-வது நாளாக நீடிக்கும் கனமழை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Copied!
Nigazhvu News

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3-வது நாளாக நீடிக்கும் கனமழை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

கன்னியாகுமரி மாவட்டத்தில்  தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழையினால் தமிழகம் முழுவதும் மழை பெய்துவருகிறது.  இதன் காரணமாக வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையினால்,  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

 இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் 20 நாட்களுக்கும்  மேலாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள நீர்நிலைகள் பெருகி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.‌ அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாக அதிகரித்துள்ளதால், அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 இதனால்  கோதையாறு, வள்ளியாறு, பழையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு ஆகியவற்றால் நீர் கரைபுரண்டு ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருக்கிறது. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை வெள்ளத்தில் மூழ்கிவிட்டது‌.

தாமிரபரணியில் ஏற்பட்டுள்ள மாவட்டத்தின் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  நேற்று பிற்பகலில் இருந்து மீண்டும்  இடைவிடாது பலத்த மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.

தொடர் மழை காரணமாக இன்றும் (சனிக்கிழமை) குமரி மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று முன்தினமும், நேற்றும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

மழை வெள்ளப் பாதிப்பு பகுதிகளை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

கோவையில் பள்ளியை விட்டு விலகியும் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் : மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்ட +2 மாணவி - போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்