மழை வெள்ளப் பாதிப்பு பகுதிகளை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு இடங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்த்து ஆய்வு செய்து வருகிறார்.
தொடர்ச்சியாகப் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு. நிவாரணம் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
முதலில் சென்னைப் பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர், தொடர்ந்து காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்றுப் பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக இன்று டெல்டா பகுதிகளில் மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு வருகிறார்.
இன்று (சனிக்கிழமை) காலை புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிட இருக்கிறார்.
கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம்அடூர் அகரம் பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதோடு, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்
பருவமழையினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி பகுதியில் வசிக்கும் 31 குடும்பங்களுக்கு அரசின் நிவாரண உதவியை வழங்கிய முதல்வர், மயிலாடுதுறை மாவட்டம் இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளில் பார்வையிட புறப்பட்டார்
தொடர்ந்து நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வெள்ளப் சேதத்தை ஆய்வு செய்ய இருக்கிறார்
உங்கள் கருத்தை பதிவிடுக